புதன், 3 அக்டோபர், 2018

கிடா விருந்தில் ஏற்பட்ட தகராறில் ஒருவரை கொலை செய்த பாஜக நிர்வாகி! October 2, 2018

Image

கோவையில் கிடா விருந்தில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பாஜக நிர்வாகியை போலீசார் தேடி வருகின்றனர். 

கோவை ஆலாந்துறை பகுதியில் பாஜகவினர் மதுவுடன் கிடா விருந்து வைத்துள்ளதாக தெரிகிறது. அப்போது விநாயகர் சதுர்த்திக்கான திரட்டப்பட்ட நிதியை, வரவு செலவு கணக்கு பார்ப்பதில் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் பா.ஜ.க உறுப்பினர் நாகராஜ் என்பவரை, போதையில் இருந்த பா.ஜ.க  இளைஞர் அணி செயலாளர் கந்தசாமி கத்தியால் குத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த நாகராஜ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவாக உள்ள கந்தசாமியை தேடி வருகின்றனர். 

Related Posts: