செவ்வாய், 3 செப்டம்பர், 2019

சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை.!

Image
ஈரோடு அருகே தேசிய நெடுஞ்சாலையில் யானைகள் முகாமிட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் கவனமாக செல்லும்படி வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த ஆசனூர் வனப்பகுதியில் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. தற்போது பருவமழை இல்லாததால்  உணவுக்காகவும், தண்ணீருக்காகவும் யானைகள் கூட்டம் கூட்டமாக தேசிய நெடுஞ்சாலையை கடந்து சென்று வருகின்றன. 
இந்நிலையில், இன்று காலை சுமார் அரை மணி நேரம் சாலையில் முகாமிட்ட யானைகள், பிறகு சாலையை கடந்து சென்றது. சில யானைகள் அந்த வழியாக சென்ற வாகனங்களை துரத்தி வாகன ஓட்டிகளை அச்சுறுத்தின. இதனால் சத்தியமங்கலம்  - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களில் செல்லும் சுற்றுலா பயணிகள் கவனமாக இருக்கும்படி வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

credit ns7.tv