சனி, 1 செப்டம்பர், 2018

கைதான மாணவர்களின் பெற்றோர் வேதனை: மனம் உடைந்து பிள்ளைகளை தாக்கிய பெற்றோர்! August 31, 2018

Image

சென்னையில் மாநகர பேருந்தில் பயணித்தபோது மாணவர்கள் சிலர் பட்டாக் கத்தியை சாலையில் உரசிச் சென்ற விவகாரத்தில் மேலும் 3 பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். 

மாநிலக்கல்லூரி மாணவர்கள் சிலர்  நேற்று 57-F பேருந்தில், படியில் பயணித்த படி சென்றனர். அப்போது, பட்டா கத்தியை சாலையில் உரசியபடி, பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக ரகளையில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் பரவியது. 

இதுதொடர்பாக தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்ட போலீஸார், ரகளையில் ஈடுபட்ட மாணவர்கள் அனைவரும் செங்குன்றத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை கண்டறிந்தனர். முதலில் கல்லூரி மாணவர் ஆனந்தராஜை நேற்று கைது செய்த போலீஸார், அவர் அளித்த தகவலின்பேரில், ரவி, ராஜா மற்றும் தாமோதரன் ஆகியோரை இன்று கைது செய்தனர். பட்டாக்கத்தையை தரையில் உரசிச் சென்ற விவகாரம் தொடர்பாக ரூட்டு தல விக்கி, அருண் உள்ளிட்ட மேலும் 5 மாணவர்களை தேடி வருகின்றனர். 

சென்னை வண்ணாரப்பேட்டை காவல்நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள மாணவர்கள் குறித்து அவர்களின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் மனம் உடைந்துபோன பெற்றோர், வேதனையுடன் தங்களது பிள்ளைகளை அடித்து கண்டிதனர். கல்லூரியில் படிக்கத்தானே அனுப்பினோம் என்று கூறிய அவர்கள் கண்டிக்கும் காட்சிகள் காண்போரையும் கலங்கச் செய்துள்ளது.