புதன், 5 செப்டம்பர், 2018

கேரளாவை தொடர்ந்து தமிழகத்திலும் பரவும் எலிக்காய்ச்சல்! September 5, 2018

Image

► லெப்டோஸ்பைரோஸிஸ் எனப்படும் எலிக்காய்ச்சல் என்பது ஸ்பைரோகீட்ஸ் என்ற சுருவடிவ பாக்டீரியாவால் ஏற்படுகிறது.

► பொதுவாக, மிருகங்களைத் தாக்கக்கூடிய இந்த நோய், மனிதர்களையும் தாக்கக்கூடும்.

► பாக்டீரியவால் பாதிக்கப்பட்ட விலங்குகளின் சிறுநீர் தோலில் படும்போது, வெட்டுக்காயம், சிராய்ப்புகள் வழியாகவும், கண்கள் மூலமாகவும் உடலுக்குள் கிருமிகள் நுழைந்துவிடும்.

► கிருமிகள் கலந்த தண்ணீரில் நீண்டநேரம் இருக்க நேரிட்டால்,தோல் வழியே கிருமிகள் உள்ளே சென்றுவிடும். 

► இந்த வகை பாக்டீரியா கலந்த தண்ணீரைக் குடிப்பதாலும் கிருமிகள் கலந்த காற்றைச் சுவாசிப்பதாலும் எலிகாய்ச்சல் ஏற்படலாம். 

► மாடுகள், பன்றிகள், எலி மற்றும் நாய்களில் இருந்து ஸ்பைரோகீட்ஸ் கிருமிகள் பரவுகின்றன.

► ஒரு மனிதரிடம் இருந்து இன்னொரு மனிதருக்கு இந்த பாக்டீரியா கிருமிகள் பரவாது.

► பாக்டீரியா உடலுக்குள் நுழைந்த ஏழு முதல் பன்னிரெண்டு நாள்கள் கழித்தே எலிகாய்ச்சல் நோயின் அறிகுறிகள் தென்படும்.

► முதல் கட்டமாக, குளிர்க்காய்ச்சல், நடுக்கம், தலைவலி, உடல் வலி, உடல் தளர்வு, கண்கள் சிவந்துபோதல், கண் கூச்சம், வயிற்று வலி, வாந்தி, உடலில் தடிப்புகள் போன்றவை ஏற்படும்.

► இரண்டாவது கட்டத்தில், கிருமிகள் பல்வேறு திசுக்களையும் உடல் உறுப்புகளையும் தாக்குவதால் பாதிப்பு ஏற்படும். 

► சுமார் 4 முதல் 30 நாள்கள் வரை நோயின் அறிகுறிகள் நீடிக்கும்.

► எலிகாய்ச்சல் பாதிப்பு ஏற்படுபவர்களுக்கு கல்லீரலும், சிறுநீரகமும் அதிகமாகப் பாதிக்கப்படும். 

► எலி ஜுரத்தில் தப்பிக்கும் முதல் தடுப்பு நடவடிக்கையாக எலிகளை ஒழிக்கவேண்டும்

► விலங்குகளின் சிறுநீர் கலந்த நீர்நிலைகள் மற்றும் விளைநிலங்களில் வேலை செய்பவர்கள், உடல் முழுவதும் மூடக்கூடிய உடைகளை அணிய வேண்டும்.

► வீட்டில் வளர்க்கும் கால்நடைகளுக்கு தடுப்பூசி போடவேண்டும்.

► நோய் பரவும் இடங்களில் வசிப்பவர்களும், நோய் தாக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளவர்களும் முன்னெச்சரிகையாக மருந்துகளை எடுத்து கொள்ளுதல் நலம்.

Related Posts: