திங்கள், 2 செப்டம்பர், 2019

பிரதமர் மோடியை வம்பிழுக்கும் சல்மான் குர்ஷித்!

Image
பிரதமர் மோடி செய்த நல்லவைகளை தேடுவது என்பது வைக்கோல் போரில் ஊசியை தேடுவது போலாகும் என காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.
அரசை வழிநடத்துவதில் பிரதமர் மோடியின் செயல்பாடுகள் முழுக்கவே எதிர்மறையாக இருப்பதாக விமர்சிப்பதை வழக்கமாக்கிக் கொள்வதை காங்கிரஸார் தவிர்க்க வேண்டும், இது கட்சியின் வளர்ச்சிக்கு உதவாது, அவரின் சிறந்த செயல்திட்டங்களை மதிக்க வேண்டும் என சில நாட்களுக்கு முன்னர் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் ஜெய்ராம் ரமேஷ், அபிஷேக் மனு சிங்வி போன்றோர் அதிரடியாக கருத்துக்களை வெளியிட்ட நிலையில், தற்போது இதற்கு பதிலடி தருவது போன்ற கருத்தினை சல்மார் குர்ஷித் வெளியிட்டுள்ளார்.
எனது கண்ணோட்டத்தின்படி பார்த்தால் மோடி நாட்டுக்கு செய்த நல்லவைகளை தேடுவது என்பது வைக்கோல் போரில் ஊசியை தேடுவது போலாகும் என சல்மான் கூறினார்.
ஜெய்ராம் ரமேஷ், அபிஷேக் மனு சிங்வி ஆகியோர் பிரதமர் மோடி தொடர்பாக தெரிவித்த கருத்து குறித்து பேச விரும்பவில்லை அது அவர்களின் கருத்து என கூறினார் சல்மான் குர்ஷித்.

credit ns7.tv