திங்கள், 2 செப்டம்பர், 2019

தமிழகத்தில் சுங்க கட்டணம் உயர்வா?

Image
தமிழகத்தில் 10க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் 5 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் மட்டும் 44 சுங்கச்சாவடிகளில் இயங்கி வருகின்றன. இங்கு ஆண்டுதோறும் 10 சதவீதம் சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. இவற்றில் தமிழகத்தில் உள்ள 22 சுங்கச்சாவடிகளுக்கு கடந்த ஏப்ரல் ஒன்றாம் தேதி சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டது. 
இந்நிலையில் எந்தவித முன் அறிவிப்பின்றி தமிழகத்தில் உள்ள விக்கிரவாண்டி, சேலம் ஓமலூர், நிலக்கோட்டை, தூத்துக்குடி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கார்களுக்கு 5 ரூபாயும், பேருந்து உள்பட கனரக வாகனங்களுக்கு 15 ரூபாய் வரை சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. முன்னறிவிப்பின்றி சுங்க விலை உயர்த்தியதற்கு வாகன ஓட்டிகள் அதிருப்தி தெரிவித்தனர்..

credit ns7.tv