செவ்வாய், 3 செப்டம்பர், 2019

பொருளாதார நெருக்கடி குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கருத்து..!

Image
பொருளாதார சுனாமியில் இருந்து மோடி தப்பிக்க முடியாது என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். 
அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் அருகே கோழிகொண்டான் ஏரியை ஆழப்படுத்தும் பணி நடைபெற்றது. இதனை தொடங்கி வைத்த கே.எஸ்.அழகிரி, பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். நாட்டின் பொருளாதாரம் சீர்படுத்த முடியாத அளவுக்கு சரிந்துவிட்டதாக கூறிய அவர்,வாகன உற்பத்தி தொழிலில் 3 லட்சம் பேர் வேலை இழந்துள்ளதாகவும் குறிப்பிட்டார். 
அரசு, ரிசர்வ் வங்கியிடம் உபரி நிதி பெறவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அழகிரி, பொருளாதார பிரச்னைகளை மூடி மறைக்க, சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் முதல்வர் வெளிநாடுசென்று பூங்காவை பார்வையிட்டுள்ளதாகவும், அதனால் செடிகளை தான் வாங்க முடியும் என்றும் கே.எஸ்.அழகிரி விமர்சித்தார்.

credit ns7.tv